Tuesday, 30 July 2013
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை!
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:56
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வேண்டாம் ஐ.பி.எல்.போதை!
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:34
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தாய்மை கலந்த கடமை!
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:31
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Friday, 29 March 2013
கிழக்கிற்கு ஒரு நீதி! மேற்கிற்கு ஒரு நீதி!-ஏப்ரல்-2013
நடந்தது ஒரே விதமான குற்றம் சுட்டது வெளிநாட்டினர் சுடப்பட்டது இந்திய நாட்டின் பிரஜைகள்.ஆனால்,நடுவண் அரசின்
ரியாக்சன் வேறு வேறாக இருக்கிறது.இத்தகையதொரு அதிசய நிகழ்வு நம் நாட்டில் மட்டுமே நடக்கும்.
கேரளக் கடற்கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்,தமிழக எல்லையோரம் மீன் பிடிக்கும் மீனவர்களை மட்டும் ஒருமைப்பாட்டு தர்மம் சிறிதும் இன்றி,பிரதேச அடையாள மிட்டு தமிழக மீனவர்கள் என்று தனிமைப்படுத்துகிறார்.
''எச்சரிக்கை செய்தும் கப்பலருகே வந்தார்கள் எனவே கடற்கொள்ளையர்கள் என்று தவறாக சுட்டுவிட்டோம்''என்கிற இத்தாலி வீரர்களை வழக்கில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.பாராளுமன்றம் வெகுண்டெழுகிறது.எதிர்க்கட்சிகள்
ஆர்ப்பரிக்கின்றன,இத்தாலிய தூதர் தாயகம் போவதற்கு விமான நிலையக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.சரி நல்ல விஷயம்தான்.இந்திய மீனவர்களுக்கான இத்தகைய கருணை வரவேற்கக்கூடியதுதான்.
ஆனால்,அதே இந்தியாவில் பிறந்து,தனது வாழ்வாதாரத்தின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடல் அன்னையைத் தவிர வேறு வழியில்லாத 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள வெறியர்களால் இதுவரைக்
கொல்லப்பட்டிருக்கும் போது எந்த வெளியுறவுத்துறை அமைச்சரும் வாயைத் திறக்கவில்லை.இதைப்பற்றி பேச பாராளுமன்றத்தில் யாருக்கும் நேரமுமில்லை.
துரதிஷ்டவசமாக,நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன் இரண்டாம்பட்சமாகவே போய்விடுகிறது
என்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் துறைகளே சான்று.தனது மாநிலத்தின் மீனவர்கள் சுடப்பட்ட போது கொதித்தெழுந்த ஏ.கே.அந்தோணியைப் போன்ற மத்திய ராணுவ அமைச்சராகவோ,அதற்கு ஆதரவாய் செயல்படுகிற குர்ஷித் வகித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ நம் தமிழக அமைச்சர்கள் எவரும் இல்லை என்பது கூட(இதில் என்ன பெரிய வருமானம் வரப் போகிறது?) தமிழக மீனவர்களின் பிரச்சினை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படாமல் போனதற்குக் காரணம் என்று சொல்லலாம்.மந்திரிகளை விடுங்கள்.தமிழீழம் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் மாணவர்களின் முனைப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட நமது முதல்நிலைத் தலைவர்களிடம் நாம் பார்க்கக் காணோம்.
கூடங்குளம் மின் உற்பத்தி ஒதுக்கீடு,வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வருகின்ற மின்தடம்,தமிழ்நாட்டை ஊடுருவிச் செல்லும் கெய்ல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு குழாய் பதிப்பு என எந்த தேசியத் திட்டத்திலும் தமிழ்நாட்டின் தேசியநலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது உண்மை.கிழக்கிற்கு ஒரு நீதி,மேற்கிற்கு ஒரு நீதி என்று நடந்து கொள்ளும் அரசை எப்படி நடுவண் அரசு என்று அழைப்பது?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.இத்தனையும் நடந்தபிறகு தமிழகத்தின் நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகளில் வரும் தேர்தல்களில் வாக்குக்கோரி நடந்து வர காங்கிரசுக்கும் சரி,மற்ற தேசிய கட்சிகளுக்கும் துணிவிருக்காது.
E.உதயகுமார்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
01:54
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Sunday, 3 March 2013
விவசாயிகள் அழுகிற தேசமிது! மார்ச்-2013
ஒரு நாட்டு மக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை காப்பதற்கும்,அன்றாடம் ஏற்படும் துயரங்களை தீர்ப்பதற்கும் தான் மத்திய மாநில அரசுகள் இயங்குவதாக இந்த ஜனநாயக அமைப்பில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அப்படி இல்லையோ?என்ற ஐயங்களை சமீபகால நிகழ்வுகள் நமக்கு காட்டியவண்ணம் இருக்கின்றன.
நாட்டு மக்கள் அனைவருக்கும் படி அளந்தாலும்,தாங்கள் உய்வுறுவதற்கு எவ்வித படியும் இல்லாத விவசாய பெருமக்களுக்கு அண்மையில் ஏற்பட்டுவரும் துயரங்கள் ஏராளம் நகரங்களை மேம்படுத்தவும்,நகரங்களை இணைக்கவும்,அரசுகள் எடுக்கும் முயற்சிகளால் தெரிந்தோ தெரியாமலோ கிராமங்கள் நசுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள்,ஆறு வழிச்சாலைகளாக உருவாக்கப்பட்டாலும்,நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும்,உயர் மின்னழுத கம்பிகள் அமைக்கப்பட்டாலும்,ரயில்வே ட்ராக்குகள் அகலபடுத்தப்பட்டாலும்,அல்லது புதிதாக உருவாக்கப்பட்டாலும்,முதலில் அத்திட்டங்களுக்கு தங்களது நிலத்தையும்,சொத்துக்களையும் பறிகொடுப்பது விவசாய பெருமக்களே!விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்கிறதோ இல்லையோ துயரங்களை தொடர்ந்து கொடுக்க அரசுகள் தவறுவதே இல்லை.
இப்போது கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை திரவ வடிவில் குழாய்களின் மூலமாக எடுத்துச் செல்ல GAIL என்கிற அரசு பொதுத்துறை நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது,இந்தக் குழாய்கள் செல்லும் பாதை நமது தமிழகத்தில் 310 கி.மீ.வரை பயணிக்கிறது(கர்நாடகத்தில் 95 கி.மீ.மட்டுமே).வீடுகளுக்கு உருளைகளுக்குப் பதில் குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் இந்த திட்டம் வரவேற்கக் கூடியதுதான்.
ஆனால்,இவை நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ,இரயில்வே ட்ராக்குகளின் ஓரமாகவோ,ஆறுகளின் ஓரமாகவோ கொண்டு செல்லப்படாமல்,அப்பாவி விவசாயப் பெருமக்களின் விவசாய நிலங்களுக்கு ஊடாக ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும்?என்பது தான் நமது கேள்வி.
ஏற்கனவே.உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும்போது,உயரமான மரங்களை வளர்க்ககூடாது என்றார்கள்.இப்போது எரிவாயு குழாய்களை அமைக்கும் போது வேர்விடும் மரங்களை வளர்க்கக்கூடாது என்கின்றனர்.அது மட்டுமில்லாது,அந்த குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ,குழாய்களில் திரவக்கசிவு ஏற்பட்டாலோ நிலத்தின் உரிமையாளர்கள்தான் பொறுப்பாம்.எளிதில் தீ பற்றக்கூடிய ரசாயனம் தனது சொந்த நிலத்திற்கு அடியில் செல்வதை எந்த விவசாயிதான் விரும்புவார்?
நிலத்தின் கீழேயும் நெருப்பு(எரிவாயு),நிலத்தின் மேலேயும் நெருப்பு(உயர் அழுத்த மின் கம்பிகள்)தண்ணீரும் கிடைக்கவில்லை,உரம் வாங்கவும் காசில்லை என்று அடுக்கடுக்கான துயரங்களை விவசாயிகளுக்குக் கொடுப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.அதற்கு அரசு
'தேசிய நலன்'என்று பெயர் சூட்டினால்,அது ஜனநாயக போக்கிற்கு விரோதமானது.
பெண்களும்,விவசாயிகளும் அழுகிற தேசம் உருப்படாது என சாஸ்திரம் சொல்கிறது.
அது சரி.நாம் எப்போது சாஸ்திரங்களை மதித்தோம்?.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
23:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Wednesday, 20 February 2013
'லா'வை மீறும் சவுதாலாக்கள்! பிப்ரவரி-2013
ஒரே வீட்டில் தந்தையும்,மகனும் சிறைக்குச் செல்வது என்பது நமது பாரதத்திற்குப் புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அப்படித்தான் சிறைக்குச் சென்றார்கள்.அதையும் பெருமையாகக் கருதினார்கள்.அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டம்.ஆனால்,இன்றும் அப்படி சிறைக்குச் செல்ல துவங்கி இருக்கிறார்கள்.நாட்டு மக்களுக்காக அல்ல;வீட்டு மக்களுக்காக.
அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும்,அது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாவதும்,பின்பு அதை மறந்துவிட்டு வேறு பரபரப்பான செய்திகளுக்குத் தாவுவதும் நமக்கு வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வரிசையில் இது ஒரு புதிய செய்தி.ஒரு மாஜி முதல்வரின் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு,தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாஜி முதல்வருக்கு தண்டனை
வழங்கப்பட்டிருப்பது என்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் 1999-2000-வது ஆண்டில் தனக்கு வேண்டியவர்களையும்,லஞ்சம் வாங்கியவர்களையும் ஆசிரியர்களாக நியமனம் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும்,ஹரியானா மாநிலத்தின் அப்போதைய முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தண்டனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆயுள் தண்டனைக்கே அசராத நமது அரசியல்வாதிகளுக்கு,10 ஆண்டு கால சிறை என்பது பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது போலாகும்.இது சவுதாலாவுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும் நன்கு தெரியும்.பெரும் பணம் செலவழித்து ஆட்சியை பிடிப்பது,ஆட்சிக்கு வந்தவுடன் பன்மடங்கு பணத்தை சுருட்டுவது போன்ற அரசியல்வாதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து குறைவான தண்டனை வழங்குவது என்பது நம் வீட்டுக் குழந்தையை மயிலிறகால் அடிப்பது போன்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது.
தாமதமாக வழங்கப்பட்டிருக்கின்ற மற்றும் குற்றத்தின் தன்மைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு என்ற போதிலும்,ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு,அதுவும் ஒரு முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பதால் இதை கைதட்டி வரவேற்றுதான் ஆக வேண்டும்.
போலி நிதி நிறுவனங்கள்,மல்டி-லெவல் வியாபாரங்கள்.தேக்கு மர வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை சுருட்டும்'டை'கட்டிய கிரிமினல் பேர்வழிகளுக்கும்,சவுதாலா போன்ற
ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் உணரவில்லை.
இந்த முறைகேடுகள் ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் பரவியுள்ளது.மாஜிக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.ஓம் பிரகாஷ்,அஜய் சிங் சவுதாலாக்கள் போல 'லா'வை மீறும் சவுதாலாக்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு காலம் தாழ்த்தாது உடனே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தந்தை,மகன் இருவர் மட்டுமல்ல;இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்த்தால் நாடு முழுக்க நிறைய ஊழல் குடும்பங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.சவுதாலா குடும்பம் ஒரு தொடக்கமே.அதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குடும்பங்களின் சிறையை நோக்கிய அணிவகுப்பைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது?
காத்திருப்போம்!
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:56
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
இந்தியா ஆன்மீக பூமி அல்ல!-ஜனவரி-2013
உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினர் ஆச்சரியமுடன் பார்க்கும் பல விஷயங்களில் முதன்மையானது
நம் நாடு ஓர் 'ஆன்மீக பூமி'என்பது தான் ஆனால்,தற்போதைய காலகட்டத்தில் நம் நாடு மெல்ல மெல்ல 'ஆபாச பூமி' ஆகிக் கொண்டிருக்கிறதோ? என்கிற அச்சம் நம் எல்லோருக்கும் ஏற்படத் துவங்கியிருக்கிறது.
டெல்லியில் நடந்த மருத்துவக்கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தைத்தான் இந்த தலையங்கம் பீடிகையோடு சொல்ல முயல்கிறது என்று நினைக்க வேண்டாம்.தலைநகரில் நடைபெறும் சம்பவங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
தலைப்புச் செய்தி ஆகாமல்,தவறிப்போய் பெட்டிச் செய்திகளில்,சுருக்கமாகச் சொல்லிவிட்டு
தொடராமல் போன எத்தனையோ கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கென நாம் ஆண்டுக்கணக்கில் ஏடுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்,இதோ,
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே செய்தி ஏடுகளில் வந்த தலைப்புச் செய்தி ஆகாமல்
போன செய்திகளில் சில-
-மகளை ஈவ்டீசிங் செய்த அகாலிதள கட்சிப் பிரமுகர் ராணவைத் தட்டிக்கேட்ட
தந்தை கொலை.இடம்:அமிர்தசரஸ் .(டிசம்பர் 6)
-பள்ளிக்குச் சென்ற 13வயது மாணவி புனிதா மர்ம நபர்களால் கற்பழித்துக் கொலை.
இடம்:தூத்துக்குடி,(டிசம்பர் -21)
-இளம் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கற்பழித்ததோடு,மரத்தில் கட்டி வைத்து
அடித்து சித்திரவதை.இடம்:திரிபுரா,(டிசம்பர்-23)
-4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணைக் கற்பழித்து வெறியாட்டம்.இடம்:விருத்தாச்சலம்,(டிசம்பர் 24)
-7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் கைது.இடம்:புதுக்கோட்டை(டிசம்பர்-24)
-9 வயது பள்ளிச் சிறுமியை கடத்தி,மர்ம நபர்கள் கற்பழிக்க முயற்சி.இடம்:உஜ்ஜெயினி(டிசம்பர்-23)
-பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 எம்.எல்.ஏக்கள்,2 எம்,பி.க்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.எந்நேரமும் கைதாகலாம்.(டிசம்பர்-21)
-உத்திர பிரதேசம் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள் கொலை,கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்.(டிசம்பர் 23)
இவையெல்லாம் உதாரண சம்பவங்கள்தான்.முழுவதையும் சொல்ல வேண்டுமெனில்,
முழு இதழும் தேவைப்படும்.
வாழ்க்கை முறையிலும்,நடை உடை பாவனையிலும் நமது நாகரீகம் மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால்,நமது நடத்தை கற்காலத்தை நோக்கி அதாவது காட்டுமிராண்டித்தனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
கட்டுப்பாடில்லாத ஆபாச இணையதளங்கள்,சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் மது பானங்கள்,
விலை மலிவாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள்,யாதொரு தணிக்கையுமின்றி வெளியிடப்படும்
ஆபாசத் திரைப்படங்கள்,சரியான வழிகாட்டுதலை செய்ய முயலாத பெற்றோர்கள்,குற்றங்களின்
வேர்களைக் கண்டறிந்து களையாத அரசுகள்.இவை எல்லாமும்தான் டெல்லி சம்பவமும்,
அதே போன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ காரணங்களாகின்றன.
எதிர்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகும் என்று முழக்கமிடுகிறார் பிரதமர்.வல்லரசு வேண்டாம்.பெண்களை மதிக்கிற,பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற நல்லரசு நாடாக இருந்தாலே போதும்.
அதற்கு இந்த அரசுகள் என்ன செய்யப்போகின்றன.?
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:50
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Comments (Atom)

