பொதியேற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் அடிக்கடி செய்யும் காரியம் ஒன்று இருக்கிறது.அது,மாட்டின் கண்களில் படும்படி பத்து மூட்டைகளை வண்டியில் ஏற்றுவார்கள்.பிறகு,மாடு வண்டி இழுக்க முரண்டு பிடிக்கும் போது இரண்டு மூட்டைகளை இறக்கிவிடுவார்கள்.மாடும் பாரம் குறைந்ததென்று உற்சாகமாக வண்டியிழுக்கும்(உண்மையில் அவர்கள் ஏற்ற வேண்டியது எட்டு மூட்டைகள் தான் மீதி இரண்டும் டம்மி)
நாட்டின் பொருளாதார சூழலின் அடிப்படைக் காரணியாக விளங்கும் பெட்ரோலை,லிட்டருக்கு 7.54 ரூபாய் ஏற்றிவிட்டு 2.50 ரூபாய் குறைக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.(இந்த இதழை நீங்கள்
படிக்கும் போது அநேகமாக இரண்டு மூட்டை இறங்கியிருக்கலாம் .ஸாரி,இரண்டு ரூபாய் குறைந்திருக்கலாம்).ஒரு மாட்டுவண்டிக்காரனின் சாமர்த்தியத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஒரு முறை இரு முறை அல்ல.மன்மோகன்சிங் அரசு ஆட்சிக்கு வந்து பதினோராவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருகிறது.தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிகணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய அரசு வழக்கமான பாட்டையே பாடி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏன் நஷ்டம் ஏற்படுகிறது?நிச்சயம் அதற்க்கு வாய்ப்பில்லை.
கச்சா எண்ணெயின் தற்போதைய விலை பீப்பாய் ஒன்றுக்கு (160 லிட்டர்)105 அமெரிக்க டாலர்கள்.அதாவது ரூ.5,775.ஆக,ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ.36.09 தான்.இவற்றோடு சுத்திகரிப்பு செலவு ரூ.0.52,மூலதனச் செலவு ரூ.6.00,போக்குவரத்துச் செலவு ரூ.6.00,முகவர் கழிவு ரூ.1.05 என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட,ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.49.66 தான் ஆகிறது.
இந்த லட்சணத்தில்,பெட்ரோலுக்கு மானியம் தருகிறோம் என்று மாய்ந்து,மாய்ந்து பேசுகிறார்கள்.மானியம்
கிடக்கட்டும்,அரசு கூடுதல் வரிகள் போடாமல் இருந்தால் போதாதா?மத்திய அரசு சுங்க வரி,உற்பத்தி வரி என்று ஒரு புறமும்,மாநில அரசு விற்பனை வரி,மதிப்பு கூட்டு வரி என்று இன்னொருபுறமும் போட்டுத் தாக்க,
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.53க்கு வந்து நிற்கிறது.இப்படி ஒரு கடுமையான விலை உயர்வை
இந்திய மக்கள் கேள்விப்பட்டதில்லை.மறுநாள் முதல் விலை உயர்வு என கேள்விப்பட்டதும்,முதல்நாளே நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று.முடிந்த வரையில் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்வதுதான் நமது அதிகபட்ச சாமர்த்தியம்.
ஒரு பெரிய கோட்டின் அருகே.இன்னொரு பெரிய கோட்டைக் கிழித்து முந்தைய கோட்டை சிறியதாகக் காட்டுவது போல,இந்த விலை உயர்வை விட இன்னும் கடுமையான விலை உயர்வு வரும்.ஒரு லிட்டருக்கு ரூ.25,ரூ.30 என்று விலை ஏற்றி,சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு,ரூ.2 குறைக்கக் கூடும்.அப்போது நாம் அமைதியாகவே இருப்போம்.முடிந்தவரை அன்று மட்டும் டேங்கை நிரப்பிக்கொள்வோம்.
நாம் மாடுகளாக இருக்கும் வரை மத்திய அரசு மாட்டு வண்டிக்காரனாகத்தான் இருக்கும்.மாற்றமிருக்காது.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
மாட்டு வண்டிக்காரனும் மத்திய அரசும்!ஜூன்-2012
பொதியேற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் அடிக்கடி செய்யும் காரியம் ஒன்று இருக்கிறது.அது,மாட்டின் கண்களில் படும்படி பத்து மூட்டைகளை வண்டியில் ஏற்றுவார்கள்.பிறகு,மாடு வண்டி இழுக்க முரண்டு பிடிக்கும் போது இரண்டு மூட்டைகளை இறக்கிவிடுவார்கள்.மாடும் பாரம் குறைந்ததென்று உற்சாகமாக வண்டியிழுக்கும்(உண்மையில் அவர்கள் ஏற்ற வேண்டியது எட்டு மூட்டைகள் தான் மீதி இரண்டும் டம்மி)
நாட்டின் பொருளாதார சூழலின் அடிப்படைக் காரணியாக விளங்கும் பெட்ரோலை,லிட்டருக்கு 7.54 ரூபாய் ஏற்றிவிட்டு 2.50 ரூபாய் குறைக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.(இந்த இதழை நீங்கள்
படிக்கும் போது அநேகமாக இரண்டு மூட்டை இறங்கியிருக்கலாம் .ஸாரி,இரண்டு ரூபாய் குறைந்திருக்கலாம்).ஒரு மாட்டுவண்டிக்காரனின் சாமர்த்தியத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஒரு முறை இரு முறை அல்ல.மன்மோகன்சிங் அரசு ஆட்சிக்கு வந்து பதினோராவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருகிறது.தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிகணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய அரசு வழக்கமான பாட்டையே பாடி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏன் நஷ்டம் ஏற்படுகிறது?நிச்சயம் அதற்க்கு வாய்ப்பில்லை.
கச்சா எண்ணெயின் தற்போதைய விலை பீப்பாய் ஒன்றுக்கு (160 லிட்டர்)105 அமெரிக்க டாலர்கள்.அதாவது ரூ.5,775.ஆக,ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ.36.09 தான்.இவற்றோடு சுத்திகரிப்பு செலவு ரூ.0.52,மூலதனச் செலவு ரூ.6.00,போக்குவரத்துச் செலவு ரூ.6.00,முகவர் கழிவு ரூ.1.05 என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட,ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.49.66 தான் ஆகிறது.
இந்த லட்சணத்தில்,பெட்ரோலுக்கு மானியம் தருகிறோம் என்று மாய்ந்து,மாய்ந்து பேசுகிறார்கள்.மானியம்
கிடக்கட்டும்,அரசு கூடுதல் வரிகள் போடாமல் இருந்தால் போதாதா?மத்திய அரசு சுங்க வரி,உற்பத்தி வரி என்று ஒரு புறமும்,மாநில அரசு விற்பனை வரி,மதிப்பு கூட்டு வரி என்று இன்னொருபுறமும் போட்டுத் தாக்க,
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.53க்கு வந்து நிற்கிறது.இப்படி ஒரு கடுமையான விலை உயர்வை
இந்திய மக்கள் கேள்விப்பட்டதில்லை.மறுநாள் முதல் விலை உயர்வு என கேள்விப்பட்டதும்,முதல்நாளே நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று.முடிந்த வரையில் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்வதுதான் நமது அதிகபட்ச சாமர்த்தியம்.
ஒரு பெரிய கோட்டின் அருகே.இன்னொரு பெரிய கோட்டைக் கிழித்து முந்தைய கோட்டை சிறியதாகக் காட்டுவது போல,இந்த விலை உயர்வை விட இன்னும் கடுமையான விலை உயர்வு வரும்.ஒரு லிட்டருக்கு ரூ.25,ரூ.30 என்று விலை ஏற்றி,சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு,ரூ.2 குறைக்கக் கூடும்.அப்போது நாம் அமைதியாகவே இருப்போம்.முடிந்தவரை அன்று மட்டும் டேங்கை நிரப்பிக்கொள்வோம்.
நாம் மாடுகளாக இருக்கும் வரை மத்திய அரசு மாட்டு வண்டிக்காரனாகத்தான் இருக்கும்.மாற்றமிருக்காது.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:40
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment