கடந்த ஜனவரி -15ம் தேதி பொங்கல் திருநாளன்று நள்ளிரவு நேரம் சென்னை எழிலகக் கட்டிடத்தில் தீ விபத்து
ஏற்பட்டது என்கிற செய்தி அரசுத்துறை அதிகாரிகள்,ஊழியர்களுக்கு மட்டுமன்றி,பாரம்பரியமிக்க நினைவுச்சின்னங்களை விரும்பும் அனைவருக்கும் வருத்தமான செய்திதான்.
பாரம்பரியமிக்க கட்டிடங்களை வெறுமனே கிடங்குகளாகவும்,முட்புதர்களாகவும் வைத்துக்கொள்ள நம்மால்
மட்டுமே முடியும்.ரோம் நகரில் இன்றளவும் உள்ள கட்டிடங்களில்,ஏறத்தாழ 60 சதவிகிதத்திற்கு மேலான கட்டிடங்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவைதான்.ஆனால்,அவற்றை தங்கள் அடையாளமாகவும்,தங்கள் கலாச்சாரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பேணி பாதுகாத்து வருகின்றார்கள்.நமக்குத்தான் இத்தனை அலட்சியம்.
பாரம்பரியமிக்க கட்டிடங்களை விடுங்கள்.சாதாரணமாக அரசுக்கட்டிடங்களில் ஒருசிலவற்றை தவிர,பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பின்றி,தகுந்த பாதுகாப்பின்றி,தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்றி,அபாயகரமான கட்டிடங்களாக இருப்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.
மிகவும் முக்கியமான ஆவணங்கள் எழிலகக் கட்டிட தீவிபத்தில் எரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரிதான்.எல்லா ஆவணங்களையும்,மேஜையின் மீதும்,வரவேற்பறையிலும் வைத்திருந்தார்கள் போல.
வருகை பதிவேடுகள்,சம்பள விவரங்கள்,பணி விவரங்கள்,ஊழியர் நடத்தைக் குறிப்புகள் உள்ளிட்ட எந்த
பதிவேடுகளுமே கிடைக்கவில்லை என சாதரணமாகச் சொல்கிறார்கள்.முக்கியமான ஆவணங்களுக்கு
இன்னமும் மர பீரோதான் பாதுகாப்பானது என்று கருதும் அதிகாரிகளுக்கு எரிந்து போனது என்னென்ன?
எத்தனை கோடி மதிப்பிலான ஆவணங்கள்?எத்தனை வருட ஆவணங்கள்?எவ்வளவு மனித உழைப்பு?
என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.கடைசி வரை தீவிபத்து எப்படி நடந்தது என்பதை எந்த ஏடுகளிலும் தெரிவிக்காத அதிகாரிகளா உண்மை நிலையைச் சொல்லப் போகிறார்கள்?.
காவல் நிலையங்கள்,பத்திரப்பதிவு அலுவலகங்கள்,மின்வாரிய அலுவலகங்கள்,இன்னும் மாவட்டம் தோறும் பல்வேறு துறை சார்ந்து இயங்கி வருகின்ற,எல்லா அரசுக்கட்டிடங்களுக்குமே இதே நிலைமை வேறு எந்த மாநிலத்திலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
'பிளான் அப்ரூவலு'க்கு ச்செல்லும் கட்டுநர்களையும்,ரங்கநாதன் தெரு போன்ற நெரிசலான தெருக்களில் உள்ள கட்டிடங்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் சொல்லும் சி.எம்.டி.ஏ.மற்றும் டி.டி.சி.பி.போன்ற
அரசுக் கேந்திரங்கள்,இது போன்ற அரசு கட்டிடங்களை எப்போதாவது ஆய்வு செய்திருக்கிறதா?
தீ விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது?விடுமுறை நாட்களில் கட்டிடப் பாதுகாப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பவை பற்றி யோசித்திருக்கிறதா?என்பது மக்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தனியார் கட்டிடங்களில் பாதுகாப்பு விதிகளை வரையறுக்கும் அரசு,அரசுக் கட்டிடங்களுக்கும் அவை
பின்பற்றப்படச் செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
பொங்கல் திருநாளில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர் திரு.அன்பழகன் அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
அபாயகரமான அரசு கட்டிடங்கள்-பிப்ரவரி-2012
கடந்த ஜனவரி -15ம் தேதி பொங்கல் திருநாளன்று நள்ளிரவு நேரம் சென்னை எழிலகக் கட்டிடத்தில் தீ விபத்து
ஏற்பட்டது என்கிற செய்தி அரசுத்துறை அதிகாரிகள்,ஊழியர்களுக்கு மட்டுமன்றி,பாரம்பரியமிக்க நினைவுச்சின்னங்களை விரும்பும் அனைவருக்கும் வருத்தமான செய்திதான்.
பாரம்பரியமிக்க கட்டிடங்களை வெறுமனே கிடங்குகளாகவும்,முட்புதர்களாகவும் வைத்துக்கொள்ள நம்மால்
மட்டுமே முடியும்.ரோம் நகரில் இன்றளவும் உள்ள கட்டிடங்களில்,ஏறத்தாழ 60 சதவிகிதத்திற்கு மேலான கட்டிடங்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவைதான்.ஆனால்,அவற்றை தங்கள் அடையாளமாகவும்,தங்கள் கலாச்சாரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பேணி பாதுகாத்து வருகின்றார்கள்.நமக்குத்தான் இத்தனை அலட்சியம்.
பாரம்பரியமிக்க கட்டிடங்களை விடுங்கள்.சாதாரணமாக அரசுக்கட்டிடங்களில் ஒருசிலவற்றை தவிர,பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பின்றி,தகுந்த பாதுகாப்பின்றி,தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்றி,அபாயகரமான கட்டிடங்களாக இருப்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.
மிகவும் முக்கியமான ஆவணங்கள் எழிலகக் கட்டிட தீவிபத்தில் எரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரிதான்.எல்லா ஆவணங்களையும்,மேஜையின் மீதும்,வரவேற்பறையிலும் வைத்திருந்தார்கள் போல.
வருகை பதிவேடுகள்,சம்பள விவரங்கள்,பணி விவரங்கள்,ஊழியர் நடத்தைக் குறிப்புகள் உள்ளிட்ட எந்த
பதிவேடுகளுமே கிடைக்கவில்லை என சாதரணமாகச் சொல்கிறார்கள்.முக்கியமான ஆவணங்களுக்கு
இன்னமும் மர பீரோதான் பாதுகாப்பானது என்று கருதும் அதிகாரிகளுக்கு எரிந்து போனது என்னென்ன?
எத்தனை கோடி மதிப்பிலான ஆவணங்கள்?எத்தனை வருட ஆவணங்கள்?எவ்வளவு மனித உழைப்பு?
என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.கடைசி வரை தீவிபத்து எப்படி நடந்தது என்பதை எந்த ஏடுகளிலும் தெரிவிக்காத அதிகாரிகளா உண்மை நிலையைச் சொல்லப் போகிறார்கள்?.
காவல் நிலையங்கள்,பத்திரப்பதிவு அலுவலகங்கள்,மின்வாரிய அலுவலகங்கள்,இன்னும் மாவட்டம் தோறும் பல்வேறு துறை சார்ந்து இயங்கி வருகின்ற,எல்லா அரசுக்கட்டிடங்களுக்குமே இதே நிலைமை வேறு எந்த மாநிலத்திலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
'பிளான் அப்ரூவலு'க்கு ச்செல்லும் கட்டுநர்களையும்,ரங்கநாதன் தெரு போன்ற நெரிசலான தெருக்களில் உள்ள கட்டிடங்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் சொல்லும் சி.எம்.டி.ஏ.மற்றும் டி.டி.சி.பி.போன்ற
அரசுக் கேந்திரங்கள்,இது போன்ற அரசு கட்டிடங்களை எப்போதாவது ஆய்வு செய்திருக்கிறதா?
தீ விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது?விடுமுறை நாட்களில் கட்டிடப் பாதுகாப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பவை பற்றி யோசித்திருக்கிறதா?என்பது மக்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தனியார் கட்டிடங்களில் பாதுகாப்பு விதிகளை வரையறுக்கும் அரசு,அரசுக் கட்டிடங்களுக்கும் அவை
பின்பற்றப்படச் செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
பொங்கல் திருநாளில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர் திரு.அன்பழகன் அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:37
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment