கிபி.1246,வெள்ளையர்களும் அவர்கள் சார்ந்த விஷயங்களும் இந்திய மண்ணில் கால் பதிக்காத காலகட்டம் அது.சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய சிறு இராஜ்ஜியம் ஒன்றிற்கு மன்னனாக இருந்தவன் சோழ வம்சத்தின் விளிம்பில் இருந்த மூன்றாம் இராஜராஜன்.செல்வச்செழிப்பில் நடுத்தரமாக இருந்த அவனது இராஜ்ஜியத்தின் மீது மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்த போது,அவனிடம் சரண்டராகி,மாதம் தோறும் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான் இராஜராஜன்.இரு ஆண்டுகள் கழிந்த பிறகு கடுமையான பஞ்சத்தில் அகப்பட்டது இராஜராஜனின் தேசம்.மழையின்றி தானியக்கிடங்கில் சேமிப்புகள் இல்லை,கால்நடைகளும் மடிந்து போயின.அந்த சூழ்நிலையிலும் தான் செலுத்த வேண்டிய கப்பத்தொகையை சேனாதிபதி மூலம் கொடுத்தனுப்பினான் இராஜராஜன்.
கப்பத் தொகை கொடுத்த வேகத்தில் திரும்பி வந்தது.கூடவே இரண்டாயிரம் கால்நடைகளும்,100 பெரிய கலன்கலில் தானியங்களும்,40க்கும் மேற்பட்ட பார வண்டிகளில் ஆடைகளும் அணிவகுத்து நின்றன.
சேனாதிபதி கையில் சுந்தரபாண்டியன் கொடுத்தனுப்பிய ஓலை.அதில் சுந்தரபாண்டியன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தான்.'அன்பு இராஜராஜா! தங்களது தேசம் பசி,பிணி,பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் இந்த சூழலிலும் தவறாது கப்பம் செலுத்திய உங்கள் நேர்மை கண்டு வியந்தேன்.இருப்பினும்,எரியும் வீட்டில் பிடுங்குவதா தர்மம்? உங்களது நாட்டின் சூழ்நிலை சீராகி விட்ட பிறகு,கப்பம் தந்தால் போதும்.நான் அனுப்பியிருக்கும் கால்நடைகளையும்,தானியங்களையும்,தயைக் கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்'என்று எழுதியிருந்தான் சுந்தரபாண்டியன்.
தன்னிடம் கப்பம் கட்டும் சிறு அரசனாக இருந்தாலும் கூட,அவனது தேசத்தின்பாற்,குடிமக்களின் பாற் நேசம்
கொண்டிருந்த சுந்தரபாண்டியனை படித்ததும்,எவ்வளவு முயன்றும் நம்மால் மத்திய அரசினையும்,மாநில அரசினையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் ஒரு மாநிலத்தில் இல்லை என்றால் அந்த மாநிலத்தை மத்திய அரசு ஆதரிப்பதில்லை என்பது தொன்றுதொட்டு வரும் மரபு.வேண்டிய அளவு நிதி தராமல் இருப்பதும்,இயற்கை பேரிடர்களுக்கு உதவாமல் இருப்பதும்,புதிய நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும் ஆகிய இச்செயல்கள் மூலம் ஒரு மாநிலத்தின் குடிமக்களுக்கு மத்திய அரசு ஏன் நேசத்தை காட்ட முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது,
இன்னும் சில நாட்களில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு
மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.ஆனால்,மத்திய அரசிடம்
இருந்து பதில்தான் வரவில்லை.நமது மாநிலத்தில்,நமது இடத்தில்,அணுஉலை அச்சங்களுக்கு இடையே கிடைக்கின்ற மின்சாரம் தமிழக மக்களுக்குச் சொந்தமில்லை என்பது அநீதியாகும்.கூடங்குளம் மின்சாரத்தை தமிழக மக்களுக்கே பெற்றுத்தரும் முயற்சியில் தன்னந்தனியாக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார்.அவருடன் சேர்ந்து குரல் கொடுப்பது நமது கடமையாகும்.
ஒரு வேளை அதற்கும் செவிசாய்க்கவில்லை எனில்,போரிட்ட பகைவனிடம் நேசம் காட்டிய
சுந்தரபாண்டியனின் கதையை யாரவது மொழி பெயர்த்து பிரதமரிடம் தெரிவித்தால் ஒருவேளை மனது வைக்கலாம் மத்திய அரசு.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
மனது வைக்குமா மத்திய அரசு?மே-2012
கிபி.1246,வெள்ளையர்களும் அவர்கள் சார்ந்த விஷயங்களும் இந்திய மண்ணில் கால் பதிக்காத காலகட்டம் அது.சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய சிறு இராஜ்ஜியம் ஒன்றிற்கு மன்னனாக இருந்தவன் சோழ வம்சத்தின் விளிம்பில் இருந்த மூன்றாம் இராஜராஜன்.செல்வச்செழிப்பில் நடுத்தரமாக இருந்த அவனது இராஜ்ஜியத்தின் மீது மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்த போது,அவனிடம் சரண்டராகி,மாதம் தோறும் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான் இராஜராஜன்.இரு ஆண்டுகள் கழிந்த பிறகு கடுமையான பஞ்சத்தில் அகப்பட்டது இராஜராஜனின் தேசம்.மழையின்றி தானியக்கிடங்கில் சேமிப்புகள் இல்லை,கால்நடைகளும் மடிந்து போயின.அந்த சூழ்நிலையிலும் தான் செலுத்த வேண்டிய கப்பத்தொகையை சேனாதிபதி மூலம் கொடுத்தனுப்பினான் இராஜராஜன்.
கப்பத் தொகை கொடுத்த வேகத்தில் திரும்பி வந்தது.கூடவே இரண்டாயிரம் கால்நடைகளும்,100 பெரிய கலன்கலில் தானியங்களும்,40க்கும் மேற்பட்ட பார வண்டிகளில் ஆடைகளும் அணிவகுத்து நின்றன.
சேனாதிபதி கையில் சுந்தரபாண்டியன் கொடுத்தனுப்பிய ஓலை.அதில் சுந்தரபாண்டியன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தான்.'அன்பு இராஜராஜா! தங்களது தேசம் பசி,பிணி,பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் இந்த சூழலிலும் தவறாது கப்பம் செலுத்திய உங்கள் நேர்மை கண்டு வியந்தேன்.இருப்பினும்,எரியும் வீட்டில் பிடுங்குவதா தர்மம்? உங்களது நாட்டின் சூழ்நிலை சீராகி விட்ட பிறகு,கப்பம் தந்தால் போதும்.நான் அனுப்பியிருக்கும் கால்நடைகளையும்,தானியங்களையும்,தயைக் கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்'என்று எழுதியிருந்தான் சுந்தரபாண்டியன்.
தன்னிடம் கப்பம் கட்டும் சிறு அரசனாக இருந்தாலும் கூட,அவனது தேசத்தின்பாற்,குடிமக்களின் பாற் நேசம்
கொண்டிருந்த சுந்தரபாண்டியனை படித்ததும்,எவ்வளவு முயன்றும் நம்மால் மத்திய அரசினையும்,மாநில அரசினையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் ஒரு மாநிலத்தில் இல்லை என்றால் அந்த மாநிலத்தை மத்திய அரசு ஆதரிப்பதில்லை என்பது தொன்றுதொட்டு வரும் மரபு.வேண்டிய அளவு நிதி தராமல் இருப்பதும்,இயற்கை பேரிடர்களுக்கு உதவாமல் இருப்பதும்,புதிய நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும் ஆகிய இச்செயல்கள் மூலம் ஒரு மாநிலத்தின் குடிமக்களுக்கு மத்திய அரசு ஏன் நேசத்தை காட்ட முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது,
இன்னும் சில நாட்களில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு
மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.ஆனால்,மத்திய அரசிடம்
இருந்து பதில்தான் வரவில்லை.நமது மாநிலத்தில்,நமது இடத்தில்,அணுஉலை அச்சங்களுக்கு இடையே கிடைக்கின்ற மின்சாரம் தமிழக மக்களுக்குச் சொந்தமில்லை என்பது அநீதியாகும்.கூடங்குளம் மின்சாரத்தை தமிழக மக்களுக்கே பெற்றுத்தரும் முயற்சியில் தன்னந்தனியாக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார்.அவருடன் சேர்ந்து குரல் கொடுப்பது நமது கடமையாகும்.
ஒரு வேளை அதற்கும் செவிசாய்க்கவில்லை எனில்,போரிட்ட பகைவனிடம் நேசம் காட்டிய
சுந்தரபாண்டியனின் கதையை யாரவது மொழி பெயர்த்து பிரதமரிடம் தெரிவித்தால் ஒருவேளை மனது வைக்கலாம் மத்திய அரசு.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:39
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment