தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு,சட்ட மன்றத்தில் பேசியபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் அநேகமாக பலருக்கும் நினைவிருக்கலாம்.'நான் முதல்வராக பொறுப்பேற்கிறேன் என்று தெரிந்த பிறகு இங்குள்ள திருடர்கள்,கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டனர்' (ஆந்திரா மீது அப்படி என்ன கோபமோ!) என்று பெருமையாக கூறினார்.ஆனால்,உண்மையில் நடந்தது வேறு.எல்லா மாநில திருடர்களும்,கொள்ளையர்களும் வழி விசாரித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர்.
திருப்பூர்,மதுரை,உடுமலைப்பேட்டை,சென்னை என கொள்ளையர்களின் பரப்பு விரிந்து கொண்டே போக,நிலக்கொள்ளை,கல்விக்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளுக்கு ஆட்பட்டு போயிருந்த தமிழக மக்களுக்கோ இந்த நேரடிக் கொள்ளை இன்னும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
கடந்த 10 மாதங்களாக அட்டகாசம் செய்து கொண்டிருந்த கொள்ளையர்களில் வெகு சிலரே பிடிபட்டு இருக்கிறார்கள் என்பதும்,வெகு சில உடமைகள் மட்டுமே மீட்கப்பட்டு இருப்பதும் வருந்தத்தக்க செய்தி.
சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டினை வாடகை எடுத்து தங்கி,தினசரி வேலைக்கு செல்வதைப்போல வேளச்சேரிக்கு அருகே இருக்கும் பெருங்குடியிலும்,கீழ்கட்டளையிலும் கொள்ளையடித்துவிட்டு,
வீட்டிற்குள் வந்து சாவகாசமாக படுத்துக்கொள்கிறார்கள் என்கிற அளவிற்கு கொள்ளையர்களின் சொகுசு
வாசஸ்தலம் ஆகிவிட்டது தமிழ்நாடு.(குற்றம் நடந்த இடத்திலிருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் சுற்றிக்கொண்டிருந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு
ஒரு மாதம் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்)
ஆனால்,இந்த வரிசையான கொள்ளைகளுக்கு அரசின் அஜாக்கிரதை
மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது.
யார் வாடகைக்கு குடி வந்தால் என்ன?அவர் என்ன பணி செய்தால் நமக்கு என்ன?என்கிற எண்ணம் பொதுவாக வீட்டு உரிமையாளர்களுக்கு உள்ளது.
அதாவது காலம் காலமாக அதே தெருவில் குடியிருக்கும் நபர் ரூ.5000 வாடகைக்கு கேட்கிறார் என்றால்,அவரை விடுத்து ரூ.10,000 வாடகை தருவதாக சொல்லும் முன்பின் தெரியாத,பீகார் போன்ற வட
மாநிலக்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் அதிக வாடகை கேட்கும்
வீட்டு உரிமையாளர்களின் விருப்பமாகும்.
வங்கிகளுக்காகவும்,நகைக் கடைகள் போன்ற வணிக வளாகங்களுக்காகவும் கட்டிடங்கள் அமைக்கப்படும் போது,அதற்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கட்டித்தர கட்டுநர்கள்,காண்ட்ராக்டர்கள் முன்வர வேண்டும்.இதற்கென ஆகும் கூடுதல் செலவை வாடகைதாரர்கள் அல்லது கட்டிட உரிமையாளரிடமிருந்து கட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மூன்றாவதாக,பொதுமக்கள் ஆகிய நம்மை விட எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் முழு நேரக் கண்காணிப்பாளர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.நாம்தான்,நம் அருகே நிலவும் குற்றங்கள் பற்றியும்,குற்றம் ஏற்படக்கூடிய சூழல் குறித்தும்,ஐயத்திற்கு இடமானவர்கள் பற்றியும் உரிய இடத்தில் தகவல் தர முன்வர வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கிணைந்து அமைந்தால் தான் எங்கோ நடந்த குற்றங்கள் நம் ஜன்னல்களுக்கு அருகே கூட நடக்கக் கூடும் என்கிற அபாயத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
கொள்ளையர்களின் சொகுசு வாசஸ்தலம்-மார்ச்-2012
தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு,சட்ட மன்றத்தில் பேசியபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் அநேகமாக பலருக்கும் நினைவிருக்கலாம்.'நான் முதல்வராக பொறுப்பேற்கிறேன் என்று தெரிந்த பிறகு இங்குள்ள திருடர்கள்,கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டனர்' (ஆந்திரா மீது அப்படி என்ன கோபமோ!) என்று பெருமையாக கூறினார்.ஆனால்,உண்மையில் நடந்தது வேறு.எல்லா மாநில திருடர்களும்,கொள்ளையர்களும் வழி விசாரித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர்.
திருப்பூர்,மதுரை,உடுமலைப்பேட்டை,சென்னை என கொள்ளையர்களின் பரப்பு விரிந்து கொண்டே போக,நிலக்கொள்ளை,கல்விக்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளுக்கு ஆட்பட்டு போயிருந்த தமிழக மக்களுக்கோ இந்த நேரடிக் கொள்ளை இன்னும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
கடந்த 10 மாதங்களாக அட்டகாசம் செய்து கொண்டிருந்த கொள்ளையர்களில் வெகு சிலரே பிடிபட்டு இருக்கிறார்கள் என்பதும்,வெகு சில உடமைகள் மட்டுமே மீட்கப்பட்டு இருப்பதும் வருந்தத்தக்க செய்தி.
சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டினை வாடகை எடுத்து தங்கி,தினசரி வேலைக்கு செல்வதைப்போல வேளச்சேரிக்கு அருகே இருக்கும் பெருங்குடியிலும்,கீழ்கட்டளையிலும் கொள்ளையடித்துவிட்டு,
வீட்டிற்குள் வந்து சாவகாசமாக படுத்துக்கொள்கிறார்கள் என்கிற அளவிற்கு கொள்ளையர்களின் சொகுசு
வாசஸ்தலம் ஆகிவிட்டது தமிழ்நாடு.(குற்றம் நடந்த இடத்திலிருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் சுற்றிக்கொண்டிருந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு
ஒரு மாதம் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்)
ஆனால்,இந்த வரிசையான கொள்ளைகளுக்கு அரசின் அஜாக்கிரதை
மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது.
யார் வாடகைக்கு குடி வந்தால் என்ன?அவர் என்ன பணி செய்தால் நமக்கு என்ன?என்கிற எண்ணம் பொதுவாக வீட்டு உரிமையாளர்களுக்கு உள்ளது.
அதாவது காலம் காலமாக அதே தெருவில் குடியிருக்கும் நபர் ரூ.5000 வாடகைக்கு கேட்கிறார் என்றால்,அவரை விடுத்து ரூ.10,000 வாடகை தருவதாக சொல்லும் முன்பின் தெரியாத,பீகார் போன்ற வட
மாநிலக்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் அதிக வாடகை கேட்கும்
வீட்டு உரிமையாளர்களின் விருப்பமாகும்.
வங்கிகளுக்காகவும்,நகைக் கடைகள் போன்ற வணிக வளாகங்களுக்காகவும் கட்டிடங்கள் அமைக்கப்படும் போது,அதற்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கட்டித்தர கட்டுநர்கள்,காண்ட்ராக்டர்கள் முன்வர வேண்டும்.இதற்கென ஆகும் கூடுதல் செலவை வாடகைதாரர்கள் அல்லது கட்டிட உரிமையாளரிடமிருந்து கட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மூன்றாவதாக,பொதுமக்கள் ஆகிய நம்மை விட எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் முழு நேரக் கண்காணிப்பாளர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.நாம்தான்,நம் அருகே நிலவும் குற்றங்கள் பற்றியும்,குற்றம் ஏற்படக்கூடிய சூழல் குறித்தும்,ஐயத்திற்கு இடமானவர்கள் பற்றியும் உரிய இடத்தில் தகவல் தர முன்வர வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கிணைந்து அமைந்தால் தான் எங்கோ நடந்த குற்றங்கள் நம் ஜன்னல்களுக்கு அருகே கூட நடக்கக் கூடும் என்கிற அபாயத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:38
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment