Wednesday, 20 February 2013

பர்ஸ் வேட்டை-ஜூலை-2011


தொலைக்காட்சி திரையில் ஒருநாள் பாதி ரஜினியையும்,பாதி கமலையும் இணைத்துக் காட்டப்பட்டது,எதற்கு ரஜினி முகத்தையும்,கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள்?என்று நான் நினைத்த போது,அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அபத்தமாக ஒரு கேள்விக் கேட்டார்.'திரையில் உள்ள இரு முன்னணி நட்சத்திரங்கள் யார்? என்பதுதான் அது.இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் 16 வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளுவை வேறு தருகிறார்.உடனே யாரோ ஒருவருக்கு லைன்(!) கிடைத்து விட,அவர்'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும்,கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்?என்ன கூத்து இது? தினமும் இரவு 10.30 மணிக்கு,துவங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது.பரிசுத் தொகையோ ரூ.55,000.என்ன நிகழ்ச்சி இது?இதன் பின்புலம் என்ன?உண்மையிலே பரிசு கொடுக்கிறார்களா?அவர்கள் நோக்கம் என்ன?என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன,இதுபோன்ற ஏமாற்றுப் போட்டிகளை தமிழகத்தின் மூன்று முன்னணி சேனல்கள் செய்கின்றன.திரையில் காட்டப்படும் அல்லது கேட்கப்படும் கேள்விகள் சிம்பிளாகவே அமைகின்றன. அதற்கு காரணம்,பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான். திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி எண்,உண்மையில் தொலைபேசி எண் அல்ல.அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் போன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்து விடும்.(ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்)ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெலாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில: 1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் தான் பொதுமக்கள்.பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள்.பேசுபவரின் செல்போன் நம்பர்.ஊர் திரையில் காட்டப்படுவதில்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி. 2.ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக(அதுவும் ஸ்டுடியோ ஆள்தான்)நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில் தான் சரியான பதில் சொல்லப்படுகிறது,இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம். 3.கால் வெயிட்டிங்கிற்கு பதில்,நம்பர் பிஸி என்று ரிப்ளை வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால் கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம். 4.நேயர் நினைப்பது போல இது லைவ்-ஷோ அல்ல.இது ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதாவது டெட் பாடிக்கு ஆபரேஷன். 5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல்,வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு,தப்பித்து கொள்கின்றன டி.வி. சேனல்கள்இவர்கள் அடிக்கும் கூட்டுக்கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் உடந்தை. இந்த தலையங்கத்தை படித்த பிறகாவது,இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்த்து'கால்'பேசுவதை தவிருங்கள்.உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.குறிப்பிட்ட அந்த டி.வி.சேனல்களுக்கு ஒரு அட்வைஸ்! இது போன்ற நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கு பதில் சுரண்டல் லாட்டரி விற்க போகலாம் ஏனெனில்,இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment