Wednesday, 20 February 2013
எங்கே அந்த பூகோளம் தெரியாதவர்?-ஜனவரி-2011
1963.அந்த முதலமைச்சர் கொஞ்சம் பாமரத்தனமானவர்,படிக்காதவர்.பொதுக்கூட்டங்களில் அவரை எதிர்த்துப் பேசும் எதிர்கட்சிகள் அன்றாடம் இந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டுதான் போரிடும்.
பூகோளம் தெரியுமா உனக்கு?எனக் கேட்டு கெக்கலிப்பார்கள் ஆனால்,அவர் மட்டும்தான் நாட்டில் உள்ள மொத்த ஆறுகள்,ஏரிகள்,அணைக்கட்டுக்களை அறிந்து வைத்திருந்தார்,கணக்கு தெரியுமா?என்பார்கள்.நாட்டின் வேலையற்ற தொழில் வளங்களையும் பற்றிய கணக்கு விவரங்கள் அவருக்கு அத்துப்படி.
அறிவியல் தெரியாதா அவரால் தான் 150 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாயின.
ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அனுமானித்து அகற்ற அந்த தொழில் மேதையால் மட்டுமே முடிந்தது.
அந்த எதிர்கட்சிகளின் பெயர்கள் நமக்கு தேவையற்ற ஒன்று ஆனால்,அந்த முதலமைச்சரின் பெயர் காமராஜர்.
காட்சி மாறுகிறது -2011
டாஸ்மாக் வருமானங்கள்,இலவச திட்டங்கள்,வேண்டாமென மறுத்தாலும் புறங்கையில் ஆயிரம் ரூபாய் தாளை சொருகி விட்டுச் செல்லும் பாசக்கார கட்சிகள், நிதிப்பற்றாக்குறை ஆகும்போதெல்லாம் புதிய வரியை உருவாக்கும் நிர்வாகங்கள்.தலைபோகிற பிரச்சனைகளின்போதும் தலையசைத்து கேட்க விழையாத மெத்தன அரசுகள்.
2010-ன் இறுதியில் ஒட்டுமொத்த கட்டுமானத்துறையை கலங்கடித்த,கலங்கடித்துக் கொண்டிருக்கும்
கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தப்போவதாக யாதொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.தலைப்புச் செய்தியாக இடம் பிடித்த வெங்காய விலை உயர்வின் தகுதி கூட கட்டுமானத் துறைக்கு இல்லை போலிருக்கிறது.
பிரசானியா வரும் வரை அதைப்பற்றி சற்றும் யோசிக்காமல் இருப்பது,அது வந்த பிறகு ஒரே அடியாக துள்ளி குதிப்பது இதுதான் நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம்.குறைந்த பட்சம் அந்த பழக்கம் கூட கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில் எவருமே அரசு இதுவரை கடைப்பிடிக்கவில்லை.
1963-டன் ஒப்பிடும் போதும் தற்போது மேம்பட்ட தொழில் நுட்பம்,அதிநவீன அரசு துறைகள்,அதிகாரிகள் இன்னும் பல இவற்றிற்கு நடுவில் அனைத்துத் துறைகளையும் கரைத்து குடித்த ஒரு தலைவர்.காண்பதற்கும்,கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் தொழில்கள் வாழ்வதற்கு?
பூகோளம் தெரியாத,அறிவியல் அறியாத,கணக்கு தெரியாத பாமரத்தனமான அந்த முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?
நாம் கேட்கவில்லை.நாடு கேட்கிறது!
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:11
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment