2012 ல் கட்டுமானத்துறை எப்படி இருக்கும்? என்று யோசித்தால்,
ஆச்சரியக்குறிகளைவிட,கேள்விக்குறிகளே அதிகம் நம் முன் வந்து நிற்கின்றன.
வழக்கமாக கட்டுமானத்துறையில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்,
தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய இவைதான் பெரும் பிரச்சனைகளாக இருக்கும்.
ஆனால்,வெளியே சொல்லப்படாத, கட்டுமானத்துறையின் கழுத்தை நெரிக்கும்
ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருக்கிறது.
அதுதான்'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'அதாவது ஒவ்வொரு சதுர அடிக்கும் இவ்வளவு என கணக்கிட்டு,அரசியல்வாதிகள் கையூட்டாகப் பெறுவதுதான்
'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'.
இது எந்த அரசு விதிகளுக்கும்,அரசு ஆவணங்களுக்கும் அகப்படாதது.மிகமுக்கியமாக அரசின் கஜானாவிற்கு சென்று சேராதது.
கட்டிடங்களில் சாதாரண கட்டிடம்,சிறப்புக்கட்டிடம்,(SB) பன்னடுக்கு வளாகக் கட்டிடம்(MSB)
என மூன்று வகை உண்டு.இவற்றில் பெரும்பாலும் நமது கட்டுநர்கள் கட்டுவது,
சிறப்புக் கட்டிடம்,பன்னடுக்கு வளாகக் கட்டிடம் ஆகியவைதான்.
சென்ற அரசுக் காலத்தில்,சாதாரண கட்டிடம்,சிறப்புக் கட்டிடம் ஆகியவற்றிற்கு எந்த வித
கையூட்டும் பெறப்படவில்லை.ஆனால்,பன்னடுக்கு வளாகக் கட்டிடத்திற்கு
மட்டும் சதுர அடிக்கு ரூ.10 என,விலை நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வந்தது.
வேறு வழியில்லாத கட்டுநர்களும்,அதை கஷ்டப்பட்டு செலுத்தி காலத்தைக் கடத்தினர்.
காலம் மாறியது,2011 தேர்தல் வந்தது.ஆட்சியும் மாறியது.இனி.அந்த 'கட்டிங்' செலுத்த தேவையிருக்காது என்று மகிழ்ந்திருந்த கட்டுநர்களுக்கு,பேரிடி இறங்கியது.
சிறப்புக் கட்டிட வகை சதுர அடிக்கு.ரூ.50,பன்னடுக்கு வளாகக் கட்டிட வகை ரூ.100 செலுத்த வேண்டுமென கட்டாய வசூல் வேட்டை நடந்து வருகிறது.
கட்டுமான அனுமதி அளிக்கும் அரசு கேந்திரங்களை,கைக்குள் வைத்துக்கொண்டு நடைபெறும் இந்த வசூல் வேட்டையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கட்டுமானத்துறையே சிக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த'கட்டிங் ஃபீஸ்'கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக
பில்டர்கள் குமுறுகிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள் மூலமாக நடைபெறும் இந்த வசூல் வேட்டைக்கு ஒத்துவராத கட்டுநர்களின் புராஜெக்டுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.புராஜெக்டுகள் நிறுத்தப்பட்ட செய்தி வெளியே கசிந்தால்,வீடுகள் விற்பனை ஆகாது,புக்கிங் ஆன வீடுகளும் கேன்சல் ஆகிவிடுமே என்று எண்ணி,நமது கட்டுநர்கள் வேறு வழியின்றி இந்த அநியாய கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
சதுர அடிக்கு ரூ.50,ரூ.100 என இவர்களுக்கு கட்டிங் கொடுத்துவிட்டு,இந்த தொகையை சரிகட்ட,கடைசியாக விற்பனை விலையை உயர்த்த வேண்டி இருப்பதாக பரிதாபத்தோடு புலம்புகின்றனர் பில்டர்கள்.இதனால்,சதுர அடி விலையுயர்வு எக்கச்சக்கமாக எகிறி,நடுத்தர மக்களின் நீண்ட நாள் ஆசையை வெறும் பகற்கனவாக்கி விடுகின்றன.
ஒரு நாட்டின் தோற்றத்தையே மாற்றிக் காட்டும் கட்டுநர்களை நெருக்கும்,இந்த அநியாய வசூல் வேட்டையை உடனே நிறுத்தச்செய்து,நாட்டின் முதன்மை துறையான கட்டுமானத்துறைக்கு,இந்த அரசு உதவிட வேண்டும் என்பது கட்டுநர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல,
பொது மக்களின் எண்ணமும் கூட.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
வசூல் வேட்டை-ஜனவரி-2012
2012 ல் கட்டுமானத்துறை எப்படி இருக்கும்? என்று யோசித்தால்,
ஆச்சரியக்குறிகளைவிட,கேள்விக்குறிகளே அதிகம் நம் முன் வந்து நிற்கின்றன.
வழக்கமாக கட்டுமானத்துறையில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்,
தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய இவைதான் பெரும் பிரச்சனைகளாக இருக்கும்.
ஆனால்,வெளியே சொல்லப்படாத, கட்டுமானத்துறையின் கழுத்தை நெரிக்கும்
ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருக்கிறது.
அதுதான்'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'அதாவது ஒவ்வொரு சதுர அடிக்கும் இவ்வளவு என கணக்கிட்டு,அரசியல்வாதிகள் கையூட்டாகப் பெறுவதுதான்
'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'.
இது எந்த அரசு விதிகளுக்கும்,அரசு ஆவணங்களுக்கும் அகப்படாதது.மிகமுக்கியமாக அரசின் கஜானாவிற்கு சென்று சேராதது.
கட்டிடங்களில் சாதாரண கட்டிடம்,சிறப்புக்கட்டிடம்,(SB) பன்னடுக்கு வளாகக் கட்டிடம்(MSB)
என மூன்று வகை உண்டு.இவற்றில் பெரும்பாலும் நமது கட்டுநர்கள் கட்டுவது,
சிறப்புக் கட்டிடம்,பன்னடுக்கு வளாகக் கட்டிடம் ஆகியவைதான்.
சென்ற அரசுக் காலத்தில்,சாதாரண கட்டிடம்,சிறப்புக் கட்டிடம் ஆகியவற்றிற்கு எந்த வித
கையூட்டும் பெறப்படவில்லை.ஆனால்,பன்னடுக்கு வளாகக் கட்டிடத்திற்கு
மட்டும் சதுர அடிக்கு ரூ.10 என,விலை நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வந்தது.
வேறு வழியில்லாத கட்டுநர்களும்,அதை கஷ்டப்பட்டு செலுத்தி காலத்தைக் கடத்தினர்.
காலம் மாறியது,2011 தேர்தல் வந்தது.ஆட்சியும் மாறியது.இனி.அந்த 'கட்டிங்' செலுத்த தேவையிருக்காது என்று மகிழ்ந்திருந்த கட்டுநர்களுக்கு,பேரிடி இறங்கியது.
சிறப்புக் கட்டிட வகை சதுர அடிக்கு.ரூ.50,பன்னடுக்கு வளாகக் கட்டிட வகை ரூ.100 செலுத்த வேண்டுமென கட்டாய வசூல் வேட்டை நடந்து வருகிறது.
கட்டுமான அனுமதி அளிக்கும் அரசு கேந்திரங்களை,கைக்குள் வைத்துக்கொண்டு நடைபெறும் இந்த வசூல் வேட்டையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கட்டுமானத்துறையே சிக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த'கட்டிங் ஃபீஸ்'கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக
பில்டர்கள் குமுறுகிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள் மூலமாக நடைபெறும் இந்த வசூல் வேட்டைக்கு ஒத்துவராத கட்டுநர்களின் புராஜெக்டுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.புராஜெக்டுகள் நிறுத்தப்பட்ட செய்தி வெளியே கசிந்தால்,வீடுகள் விற்பனை ஆகாது,புக்கிங் ஆன வீடுகளும் கேன்சல் ஆகிவிடுமே என்று எண்ணி,நமது கட்டுநர்கள் வேறு வழியின்றி இந்த அநியாய கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
சதுர அடிக்கு ரூ.50,ரூ.100 என இவர்களுக்கு கட்டிங் கொடுத்துவிட்டு,இந்த தொகையை சரிகட்ட,கடைசியாக விற்பனை விலையை உயர்த்த வேண்டி இருப்பதாக பரிதாபத்தோடு புலம்புகின்றனர் பில்டர்கள்.இதனால்,சதுர அடி விலையுயர்வு எக்கச்சக்கமாக எகிறி,நடுத்தர மக்களின் நீண்ட நாள் ஆசையை வெறும் பகற்கனவாக்கி விடுகின்றன.
ஒரு நாட்டின் தோற்றத்தையே மாற்றிக் காட்டும் கட்டுநர்களை நெருக்கும்,இந்த அநியாய வசூல் வேட்டையை உடனே நிறுத்தச்செய்து,நாட்டின் முதன்மை துறையான கட்டுமானத்துறைக்கு,இந்த அரசு உதவிட வேண்டும் என்பது கட்டுநர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல,
பொது மக்களின் எண்ணமும் கூட.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:36
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment